திருச்சி மாவட்டத்திற்கு இந்தநாளில் பொதுவிடுமுறை-ஆட்சியர் அறிவிப்பு

Default Image
  • ஜன.,6  அன்று வைகுண்ட ஏகாதாசியை  முன்னிட்டு  பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். 

 

மார்கழிகளில் மிகவும் விஷமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாக வைகுண்ட ஏகாதாசி உள்ளது.அதுவும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து பெருமாளை விடிய விடிய தூங்கமால் அடுத்த நாள் அதிலாலை எழுந்து நீராடி திருமஞ்சனம் வைத்து வழிபட்டு துளசிநீர்  அருந்திய விரதத்தினை முடிப்பர்.வைகுண்ட ஏகாதசி அன்று தான் வைணவதலங்களில் எல்லாம் சொர்க்கவாசல் திறக்கும் அவ்வாயில் வழியாக பெருமாள் எழுந்தருளி காட்சி தருவார் உணர்வுபூர்வமான இந்த வைபவம் ஆனது வரும் 6ம் தேதி (திங்கள் கிழமை) அன்று நடக்க உள்ளது.அதன்படி வைணவத் தலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குகிறது திருச்சி ஸ்ரீரங்கம் .இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி அன்று  திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் தேர்வு நடைபெறுகின்ற பள்ளி, கல்லூரிகளுக்கும் இந்த விடுமுறையானது பொருத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்