திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் -மு.க.அழகிரி ….!இணைய வேண்டும் …!!விரும்பும் ஆதினம்

Default Image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும்,மு.க.அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று  மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கருணாநிதி சமாதியை நோக்கி அமைதி பேரணி நடத்தினர்.

Related image

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி பேரணி ஒரு வழியாக முடிந்தது.ஆனால் முக.அழகிரி முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடாதது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.பெரிய எதிர்பார்ப்புடன் நடந்த பேரணியின் முடிவில் பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதாவது அழகிரி தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இல்லையென்றால் திமுக குறித்தும் ,முக ஸ்டாலின் குறித்தும் பேசுவார் என்று எதிர்ப்பாசர்க்கப்பட்டது.ஆனால் முக.அழகிரி எதையுமே பேசாதது ஒரு பரபரப்பாக இருந்தது.

இந்நிலையில்  மு.க.ஸ்டாலின் ,மு.க.அழகிரி தொடர்பாக மதுரை  ஆதினம் கூறுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும்,மு.க.அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்