திமுகவில் வெல்லப்போவது அழகிரியின் அமைதி பேரணியா ?ஸ்டாலினின் தலைவர் தேர்தலா? தொடங்குகிறது ஒரே கருவில் பிறந்தவர்களின் போட்டி …!

Default Image

திமுகவில்  மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி இடையேயான அதிகாரப்போட்டி தொடங்கியுள்ளது.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திமுக அவசர செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
செயற்குழுவிற்கு முன்னதாக சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.
Image result for முக ஸ்டாலின் முக அழகிரி
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் அழகிரி கூறுகையில்,கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன்.
இதன் பின்னர் ஆங்கில தொலைகாட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அதில் அவர் கூறுகையில்,மு.க.ஸ்டாலினுக்கு நான் தி.மு.க-வுக்குள் வருவதில் விருப்பமில்லை. நான் திமுகவுக்கு வந்தால் வலிமையான தலைவராகி விடுவேன் என அச்சப்படுகிறார்கள். திமுகவில் கட்சிப்பொறுப்புகள் விற்கப்படுகின்றது. திமுக தலைவர்கள் பலர் ரஜினிகாந்துடன் தொடர்பில் இருக்கிறார்கள் .இப்போம் உள்ள கட்சியின் தலைமை தி.மு.க-வை சீரழித்துவிடும் என்றும் கோவமாகவும் தெரிவித்தார்.பின் செப்டம்பர் 5 ஆம் தேதி மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி தெரிவித்தார். இந்த பேரணியில், சுமார் 100000 பேர் வரை பங்கேற்பார்கள் என்றும் கூறினார்.

மேலும்,மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் தம் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த அமைதி பேரணி மூலம் நிரூபித்து காட்டப்போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்தார்.
திமுக தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க வரும் ஆகஸ்ட் 28  அன்று திமுகவின் பொதுக்குழு கூடுகிறது.
வெளியான அறிக்கை:

இந்த  அறிவிப்பில்  ஆகஸ்ட் 28 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோல் காலை 9 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள  திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்தார்.

இதன் பின்னர் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், திமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க ஆகஸ்ட் 28ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.தணிக்கைக் குழு அறிக்கை தொடர்பாகவும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி தெரிவித்தார்.
ஆனால்  ஆகஸ்ட் 28 ஆம் தேதி திமுக பொதுக்குழுவில் திமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க கூட்டம் நடைபெறுகிறது.
இதை பொறுத்தவரையில் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி இடையேயான அதிகாரப்போட்டியாகவே கருதப்படுகிறது.இறுதியில் வெல்லப்போவது அமைதி பேரணியா ?இல்லை திமுக தலைவர், பொருளாளர் தேர்தல் விவகாரமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்