காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகி எங்களை அணுகினால் கூட்டணியில் சேர்வது குறித்து முடிவெடுப்போம் என்று தினகரன் கூறிய பதிலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பதில் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின் பன்னீர்செல்வம் ஆட்சி,தற்போது பழனிசாமி ஆட்சி அந்த நாட்களின் குறுக்கே,பன்னீர்செல்வம் பிரிந்து சென்று ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தானக்கென 18 எம்.எல்.ஏக்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
இந்நிலையில் சமீபத்தில் தினகரன் திமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடன் இணைந்து செயல் படமாட்டோம் , கூட்டணியும் வைக்கமாட்டோம், வைக்கவும் முடியாது.திமுக எம்ஜிஆர் காலத்தில் இருந்து எங்கள் அரசியல் எதிரி கட்சி தான். அம்மாவின் வழியும் அதுவே. அந்த வழியில் தான் நாங்களும் பயணிப்போம்.
பாஜக ஒரு மதவாத கட்சி, எனவே பாஜக உடன் என்றைக்குமே கூட்டணி இல்லை.இதை நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன்.இதை நான் தினமும் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்காதீர்கள், அதுபோல் கேள்வியும் இனி கேட்காதீர்கள் என்றும் ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி .தினகரன் கூறினார்.
அதேபோல் நேற்று முன்தினம் பெங்களூருவில் சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் சென்றார்.இதன் பின்னர் பேசிய அவர் ,காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகி எங்களை அணுகினால் கூட்டணியில் சேர்வது குறித்து முடிவெடுப்போம்.நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்காது என்று கூறினார்.
காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகி எங்களை அணுகினால் கூட்டணியில் சேர்வது குறித்து முடிவெடுப்போம் என்று தினகரன் கூறிய பதிலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பதில் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,டிடிவி தினகரன் கூறியது அவரது சொந்த கருத்து.நாங்கள் ஏற்கனவே திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என்று சுமூகமாக கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…