திணற போகும் தீபாவளி…லாரி உரிமையாளர்கள் மீண்டும் ஸ்டிரைக்..பொதுமக்கள் அதிருப்தி…!!

Published by
Dinasuvadu desk

மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றாததை கண்டித்து தீபாவளி பண்டிகைக்கு பின் மீண்டும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் மேற்கொள்ள போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி முதல் 8 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் டீசல், சுங்க கட்டணம், 3-ம் நபர் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றின் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. ஆனால் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் கண்டுகொள்ளவில்லை.
மேலும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். லாரி தொழிலை விட்டு வேறு தொழிலுக்கும் மாறி வருகிறார்கள்.
இதற்கிடையே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அதில் மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றாததை கண்டித்து தீபாவளி பண்டிகைக்கு பின் மீண்டும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் மேற்கொள்ள உறுதி செய்யப்பட்டது.இதனால் அகில இந்திய அளவில் 70 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளும் ஓடாது. இந்த தொழிலை நம்பி உள்ள 1½ கோடிக்கும் மேலான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரவும் வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன செயலாளர் தன்ராஜ் கூறியதாவது:-
லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை 3 மாதங்கள் ஆகியும் மத்திய அரசு நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டீசல் விலை 80 ரூபாயை நெருங்கி உள்ளதால் லாரி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் முடிவுப்படி தீபாவளிக்கு பிறகு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை. எனவே மத்திய அரசு வேலை நிறுத்தம் தொடங்கும் முன்பு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தீபாவளி அடுத்தவாரம் நெருங்கும் சூழலில் லாரி ஸ்டிரைக்_கால் அனைத்து வகை பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது.
dinasuvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

1 min ago

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

16 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago