திடீர் திருப்பம் …!வேட்பு மனு தாக்கல் செய்ய நான் ரெடி …!மு.க.அழகிரி அதிரடி

Published by
Venu

மு.க.ஸ்டாலின் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து மு.க.அழகிரி  கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின் மெரினாவில் அஞ்சலி செலுத்தியவுடன் மு.க.அழகிரி கூறுகையில், கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன் என்று பரப்பராக கூறினார்.
ஆனால் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் வரும் 26ம் தேதி(அதாவது நேற்று ) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
Related image
அதேபோல் நேற்று நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில்  செயல் தலைவராக இருந்த  மு.க ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக  தேர்வு செய்யப்பட்டார்.
பின் நாளை நடைபெறும்  தி.மு.க பொதுக்குழுவில் கூடி மனுவை ஆய்வு செய்து தலைவராக மு.க ஸ்டாலின் அறிவிக்கப்படுவார்.
ஆனால்  மு.க.அழகிரி தலைமையில் செப்டம்பர் 5 ஆம் தேதி மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.
அவர் கூறுகையில், என்னை இணைப்பதாக தெரியவில்லை என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், செப்டெம்பர் 5ஆம் தேதி பேரணிக்கு பிறகு அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பேன். நேரம் வரும் போது எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன்.அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.
பின்னர்  மதுரை சத்ய சாய்நகர் வீட்டில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை ஈடுபட்டார் . மதுரை, நெல்லை, குமரி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் ஆலோசனையில் பங்கேற்றனர்.அதில், செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள அமைதி பேரணியில், பலத்தை காட்டும் வகையில், கூட்டத்தை திரட்டுவது குறித்தும், தி.மு.க., பொதுக்குழுவில், ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்குரல் எழுப்புவது குறித்தும், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து  அழகிரி ஆலோசனை நடத்தினார்.
செய்தியாளர்களிடம் ஆலோசனைக்கூட்டத்திற்குப்பின் பேசிய மு.க.அழகிரி, அண்ணா, கருணாநிதி ஆகியோர் வளர்த்த திமுகவில் சேருவதற்கு கதவை தட்டுவதில் எந்தவித தவறும் இல்லை என்றார்.

சென்னையில் வரும் 5ம் தேதி தமது தலைமையில் நடக்கும் அமைதிப் பேரணி, திமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். இதன் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என கூறியுள்ள மு.க.அழகிரி, திமுகவில் தம்மை சேர்க்காவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்றும் எச்சரித்தார்.
அதேபோல் நேற்றும் அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.அந்த ஆலோசனைக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து மு.க.அழகிரி கூறுகையில்,அது பற்றி என்னிடம்  ஏன் கேள்வி கேட்கிறீர்கள். அவரது வேட்பு மனுவுக்கு என்னை முன்மொழியச் சொல்கிறீர்களா என்று ஆவேசமாக பதில் கூறினார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இடைத் தேர்தல் வந்தால் வேட்பு மனு தாக்கல் செய்வேன் என்று அதிரடியாக கூறினார்.
DINASUVADU

Published by
Venu

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago