தலைமை காவலர் மனைவி தன் குழந்தையுடன் தற்கொலை……..!!

Published by
kavitha

குடும்பத்தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தலைமை காவலர் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கம்பம் பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related image

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் அழகுதுரை. கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமை காவலராக  பணியாற்றிவருகிறார். இவருக்கும் இவரது மனைவி ஜெயமணி என்பவருக்கும் குடும்ப பிரச்சனைகள் இருந்துவந்துள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் பணி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார் அழகுதுரை.

வீடு பூட்டிக்கிடந்துள்ளது. மனைவி அவரது அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார் என்று நினைத்து மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுவிட்டு இரவு 7.30 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போதும் வீடு பூட்டியே இருந்துள்ளது. சந்தேகமடைந்த அழகுதுரை, தனது மாமியார் வீட்டிற்குப் போன் செய்து விசாரித்துள்ளார். அங்கே ஜெயமணி வரவில்லை என்று கூறியுள்ளனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஜெயமணி தூக்கில் தொங்கியபடி  இருந்துள்ளார்.

சடலத்தையும் விட்டு வைக்கமாட்டீங்களா..?

இறந்த ஜெயமணி மற்றும் அவரது குழந்தைகளின் உடல்கள் கம்பத்தைச் சேர்ந்த சிவா ஆம்புலன்ஸ் என்ற தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஆம்புலன்ஸ் உரிமையாளரான சிவா என்பவர், ஜெயமணியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியைப் பறித்துள்ளார்.

அதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், சிவாவைக் கடுமையாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் பேசிய போது, “ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிவா கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆம்புலன்ஸ் லைசன்ஸ் ரத்து செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது” என்றார். இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சூழலில், இப்படி ஒரு சம்பவம் நடந்தது கம்பம் பகுதி மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

8 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

8 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago