தற்போதைக்கு தமிழக அரசை கலைக்கும் எண்ணம் இல்லை!இல.கணேசன்

Default Image

மதுரையில் நேற்று  பா.ஜனதா தேசிய செயலாளர் இல.கணேசன் நிருபர்களிடம் பேசினார்.

மதுரையில் மோடி அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை  சமுதாய தலைவர்களை சந்தித்து விளக்குவதற்காக வந்துள்ளேன்.

காவிரி பிரச்சனை தொடர்பாக அப்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பிரதமர் மோடி ஏன் கலந்து பேசவிலலை என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். அப்போது சட்டசபை தேர்தல் நடந்ததால் அதற்கான சூழ்நிலை அமையவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை 100-க்கு 100 சதவீதம் மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.

முத்தலாக் விவாகரத்து சட்டம் குறித்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அதனை அ.தி.மு.க. உறுப்பினரும், துணை சபாநாயகருமான தம்பித்துரை பாராட்டி பேசினார். ஆனால் இப்தார் விருந்தில் முத்தலாக் சட்டம் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து பேசி உள்ளார். இது அவரது கருத்தா? கட்சியின் கருத்தா? என தெரியவில்லை.

எனவே தமிழக அரசு முத்தலாக் சட்டம் குறித்து தங்களின் கொள்கை முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழக அரசை கலைக்கும் எண்ணம் மத்திய பா.ஜனதா அரசுக்கு கிடையாது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் அப்படி நடந்துள்ளது. அதே நேரத்தில் ஆட்சி தானாக கலைந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நிபுணர்கள் குழு பரிந்துரை தற்போது வெளிவந்துள்ளது. எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரலாம்.

தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இப்போது ஆலோசிக்கவில்லை. தமிழகத்தில் எங்கள் நிலைப்பாடு என்னவென்றால் சூரியன் உதிக்கும் இடத்தில் சந்திரன் இருக்காது. அ.தி.மு.க.வுடனும் கூட்டணி இல்லை. தற்போது மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன்தான் நாங்கள் உள்ளோம். தேர்தல் வரும் போது அந்த நேரத்தில் கலந்து பேசி கூட்டணி பற்றி பின்னர் அறிவிப்போம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்