தமிழ் சினிமாவை சேர்ந்தவர்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் முன்னிருந்து தீர்த்து வைப்பேன்….!தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Default Image

தேமுதிக தலைவர் விஜயகாந்த், கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் முன்னிருந்து தீர்த்து வைப்பேன் என்று  தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த கரசங்கால் பகுதியில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கலைத்துறையை வாழ வைக்க தம்மால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

விழாவில் பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், விஜயகாந்துடன் கூட்டணி வைக்க வேண்டிய காலம் வந்தாலும் வரலாம் என்று கூறினார்.

திரையுலகில் அள்ளி கொடுத்தவர் எம்ஜிஆர் என்றும் அதை தங்களுக்கு சொல்லி கொடுத்தவர் விஜயகாந்த் தான் என்றும் நடிகர் சத்யராஜ் குறிப்பிட்டார்.

விஜயகாந்த் மனைவி பிரேமலதா, நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்