தமிழோடு சேர்ந்தது தான் இந்தியாவின் நாகரிகம் : வைரமுத்து..!

Published by
Dinasuvadu desk
வெற்றி தமிழர் பேரவை தலைவரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிப்பேரரசு  வைரமுத்து தஞ்சையில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்
தமிழை கழித்து விட்டால் இந்தியா கழிந்து போகும் என்று கூறினார்.
பின்பு பேசிய கவிப்பேரரசு  வைரமுத்து இந்தியா என்றால் இரண்டு மொழிகளின் கலாசாரத்தால் ஆனது என்றும் இதை அறிவியல் அறிஞர்களின் கூற்று எனவும், தெற்கே தமிழ், வடக்கே சமஸ்கிருதம் மொழிகள் பரவியுள்ளது என்றும் கூறினார்.
சமஸ்கிருதம் இன்றைக்கு வாழும் மொழி என்று சொல்ல முடியாது. இரண்டு மொழிகளில் வாழத்தக்க மொழி, வசிக்கத்தக்க மொழி தமிழ்.ஆதிமொழி , மிகப்பழமையான மொழி தமிழ் என்றும்  தமிழை கழித்து விட்டால் இந்தியா கழிந்து போகும் என அவர்கள் உணர வேண்டும். தமிழை சேர்த்து தான் இந்தியா என்று சாட்டையடி கூற்றை கூறினார்.
ஒருமைப்பாடு
தமிழ் இருந்தால் தான், இந்தியாவின் முழு முகம் தெரியும் என்பதை அறிஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே இணையவழிக்கு மாத்திரம் அல்ல. எந்த வழிக்கும் இந்தியாவின் ஒருமைப்பாடு தமிழை கழித்து விடக்கூடாது. தமிழோடு சேர்ந்தது தான் இந்தியாவின் ஒருமைப்பாடு. தமிழோடு சேர்ந்தது தான் இந்தியாவின் நாகரிகம். இதை மத்திய அரசு உணர்ந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.
நதிக்கரையில் நாகரிகம் பிறந்தது என்பது பழைய கூற்று. ஆனால் நதிக்கரையில் நாகரிகம் அழிய தொடங்குவது என்பது ஆபத்து. தண்ணீர் தான் மூன்றாம் உலகப்போருக்கு மூல காரணமாக இருக்க போகிறது என்பது கூற்று. அந்த கூற்று இந்தியாவில் தொடங்கி விடக்கூடாது என்பது தான் கவலையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago