தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த மர்ம கும்பலை பிடிக்கச் சென்ற தமிழக தலைமை காவலர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மதுரையை சேர்ந்த நீலமேக அமரன் என்பவர் தமிழக காவல்துறையில் தலைமை காவலராகவும், சிறப்பு காவல் பிரிவுக்கு ரகசிய தகவல் அளிப்பவராகவும் பணியாற்றி வந்தவர். இவர் தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மர்ம கும்பலை பிடிப்பதற்காக ஆந்திர மாநில காவல்துறையினருடன் விசாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளார். அவர்கள் வேம்பாடு என்ற இடத்திலுள்ள சுங்கச்சாவடி அருகே சென்றபோது திடீரென அங்கு பதுங்கியிருந்த 8பேர் கொண்ட கும்பல் தமிழக காவலர் நீலமேக அமரனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து, கொலை கும்பலை அம்மாநில காவல்துறையினர் வலைவீசித்தேடி வருகின்றனர்.
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…