"தமிழக தலைமை காவலர் வெட்டி படுகொலை" கஞ்சா விற்பனை கும்பல் அட்டுழியம்..!!

Default Image

தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த மர்ம கும்பலை பிடிக்கச் சென்ற தமிழக தலைமை காவலர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மதுரையை சேர்ந்த நீலமேக அமரன் என்பவர் தமிழக காவல்துறையில் தலைமை காவலராகவும், சிறப்பு காவல் பிரிவுக்கு ரகசிய தகவல் அளிப்பவராகவும் பணியாற்றி வந்தவர். இவர் தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மர்ம கும்பலை பிடிப்பதற்காக ஆந்திர மாநில காவல்துறையினருடன் விசாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளார். அவர்கள் வேம்பாடு என்ற இடத்திலுள்ள சுங்கச்சாவடி அருகே சென்றபோது திடீரென அங்கு பதுங்கியிருந்த 8பேர் கொண்ட கும்பல் தமிழக காவலர் நீலமேக அமரனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து, கொலை கும்பலை அம்மாநில காவல்துறையினர் வலைவீசித்தேடி வருகின்றனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்