குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ இன்று காலை முதல் சோதனை நடத்திவரும்நிலையில் தமிழக காவல்துறை டி.ஜி.பியான டி.கே.ராஜேந்திரனை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதால் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் குட்கா அதிபர் மாதவராவ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர். குட்கா விவகாரத்தில் சிக்கிய டைரிஇதில் அமைச்சர் விஜயபாஸ்கர் ,டி.ஜி.பி ராஜேந்திரன் , முன்னாள் கமிஷனரான ஜார்ஜ் ஆகியோர் வீடுகளில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது
தமிழகத்தில் மட்டும்தான் வரலாற்றின் முதல்முறையாக வருமானவரிச் சோதனையில் ராம மோகனராவ் சிக்கியபிறகு தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து முதல்முறையாக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் சென்னை வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. இந்தச் சோதனையால் தமிழக காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுக்களால் ஆளுங்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஏற்கெனவே இரண்டு ஆண்டு பணி நீட்டிப்பில்தான் டி.ஜி.பியாக டி.கே.ராஜேந்திரன் இருந்துவருகிறார். குட்கா விவகாரத்துக்குப்பிறகு டி.கே.ராஜேந்திரன் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் மாநில உள்துறை அலுவலகத்தில் குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ள போலீஸ் அதிகாரிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக முதல்வருடன் ரகசியமாக உள்துறைச் செயலாளரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
சி.பி.ஐயின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன் டி.ஜி.பி., டி.கே ராஜேந்திரன் பதவி விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு அடுத்த டி.ஜி.பி சீனியாரிட்டி பட்டியலில் உள்ளவர்களில் ஒருவருக்கு டி.ஜி.பி பதவி கிடைக்கும் என்று சொல்கின்றனர் டி.ஜி.பி அலுவலக உயரதிகாரிகள்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…