தமிழக அரசியலில் பரபரப்பு …!அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் மு.க.அழகிரி ஆதரவாளர்களுடன் திடீர் சந்திப்பு…!காரணம் இதுவா …!

Published by
Venu

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

கடந்த 7 ஆம் தேதி  கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன் பின்னர் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி  திமுகவின்  தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Image result for mk alagiri mk stalin

இதேபோல் கருணாநிதியின் மூத்த மகனும் தனக்கு கட்சியில் இடம் வேண்டும் நீண்ட நநாட்களாக போராடி வந்தார்.பின்னர் சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கருணாநிதி சமாதியை நோக்கி அமைதி பேரணி நடத்தினர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி பேரணி ஒரு வழியாக முடிந்தது.ஆனால் முக.அழகிரி முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடாதது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.பெரிய எதிர்பார்ப்புடன் நடந்த பேரணியின் முடிவில் பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதாவது அழகிரி தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இல்லையென்றால் திமுக குறித்தும் ,முக ஸ்டாலின் குறித்தும் பேசுவார் என்று எதிர்ப்பாசர்க்கப்பட்டது.ஆனால் முக.அழகிரி எதையுமே பேசாதது ஒரு பரபரப்பாக இருந்தது.

இதன் பின்னர் சமீபத்தில் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அழகிரி குறித்து கருத்து ஒன்றை தெரிவித்தார்.அவர் கூறுகையில், பல வருடங்களாக பதவியில் இல்லாமல் இருந்தாலும், மிகப்பெரிய கூட்டத்தை அழகிரி கூட்டியுள்ளார்.மு.க.அழகிரி பல்வேறு இடையூறுகளையும் தாண்டி தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக் கணக்கான தொண்டர்களை திரட்டி உள்ளார். ஆனால் இடைத்தேர்தல் வரும் போது அழகிரிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளதா என்பது தெரியவரும் என்றும் மு.க.அழகிரிக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டும்  தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது மதுரையில்  முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி  அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் மரணமடைந்தார்.திடீரென்று  மு.க.அழகிரி  தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டிற்கு சென்று அவரது  தாயார் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதன் பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு மு.க.அழகிரி  ஆறுதல் கூறினார்.

இதன் பின்னர் வெளியே வந்த அழகிரி செய்தியாளர்களிடம் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து சென்று விட்டார்.இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி மறைவிற்கு பிறகு சமீப காலமாக அமைச்சர் செல்லூர் ராஜு மு.க.அழகிரிக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

13 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

14 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

14 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

14 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

15 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

15 hours ago