திருநங்கைகளுக்கு தனியாக மருத்துவமனை மற்றும் சிறப்பு பிரிவு உருவாக்கப்படுவதாக அமைச்சர் விஜய் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அடுத்த பாப்பாபட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இ-சிகரெட் தடை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற அறிவிப்பால் மக்கள் எதிர்பார்ப்பை அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது. மேலும் இந்த ஆண்டு முதல் மருத்துவர்களே, பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று இலவசமாக சக்கரை நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களை முன்னதாக கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் பருவகாலங்களில் ஏற்படும் நோய்களுக்கு போதிய மருந்துகள் இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுமட்டுமல்லாது, தமிழகத்தில் திருநங்கைகளுக்கு என்று தனி மருத்துவமனைகளும், சிறப்பு பிரிவுகளும் தொடங்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…