தமிழக அரசின் அசத்தல் திட்டம்.!

Default Image

திருநங்கைகளுக்கு தனியாக மருத்துவமனை மற்றும் சிறப்பு பிரிவு உருவாக்கப்படுவதாக அமைச்சர் விஜய் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அடுத்த பாப்பாபட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இ-சிகரெட் தடை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற அறிவிப்பால் மக்கள் எதிர்பார்ப்பை அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது. மேலும் இந்த ஆண்டு முதல் மருத்துவர்களே, பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று இலவசமாக சக்கரை நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களை முன்னதாக கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் பருவகாலங்களில் ஏற்படும் நோய்களுக்கு போதிய மருந்துகள் இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாது, தமிழகத்தில் திருநங்கைகளுக்கு என்று தனி மருத்துவமனைகளும், சிறப்பு பிரிவுகளும் தொடங்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்