தமிழகம் முழுவதிலுமிருந்து திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 30ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Default Image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ஏப்ரல் 30ம் தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதிலுமிருந்து திருவண்ணாமலைக்கு  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறியுள்ளார்.

சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கந்தசாமி, திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், அங்கிருந்து கோவிலுக்கு பக்தர்களை அழைத்துச் செல்ல இலவச பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 2,800 சிறப்பு பேருந்துகள், 7,300 முறை இயக்கப்படும் என்றும், 2,500 போலீஸார் திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்