தமிழகம் கல்லாதோர் இல்லாத மாநிலமாக திகழ்கிறது….!முதலமைச்சர் பழனிசாமி
கல்லாதோர் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக அவர் கூறுகையில், கல்வியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. கருவறை, ஆசிரியர் உள்ள வகுப்பறை இரண்டும் முக்கியமானது.போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளது. மாணவர்களுக்கு கற்பிப்பதில் ஆசிரியர்களுக்கு பேரார்வம் இருக்க வேண்டும்.புதிய பாடத்திட்டங்களை சிறப்பாக கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.கல்வித்துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக நிதி இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.