தமிழகத்தில் நீட்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் 20 மாணவர்கள்!

Published by
Venu

இன்று நடப்பாண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்,தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்களுக்கும், 10 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 784 இடங்களுக்கும், 11 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 20 இடங்களுக்கும் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில்  எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ள்ளார். 2-ம் இடம் ராஜ் செந்தூர், 3-ம் இடம் பிரவின் பெற்றுள்ளனர்.

இதன் பின்னர் பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ படிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த ஒரு திருநங்கையின் விண்ணப்பம் ஏற்க்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான கல்விக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும். தமிழ்நாட்டில் 3,393 மருத்துவ இடங்கள் உள்ளன, பல் மருத்துவ படிப்பில் 1,198 இடங்கள் உள்ளன என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தற்போது  தமிழகத்தில் நீட்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் 20 மாணவர்கள் பெற்றுள்ளனர். 501-599 வரை 188 மாணவர்களும், 451-500 வரை 306 மாணவர்களும், 401-450 வரை 750 மாணவர்களும், 351-400 வரை 1,308 மாணவர்களும் 301-350 வரை 2,158 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

7 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

7 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

7 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

7 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

8 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

8 hours ago