தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்ட மத்திய அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்ட பூவுலகின் நண்பர்கள் அமைப்பு…!

Published by
Dinasuvadu desk

 

பூவுலகின் நண்பர்கள் கண்டன அறிக்கை:
நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை தமிழகத்தில் அமைப்பதில் உள்ள தடைகளை நீக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை செயலாளர் சின்கா அவர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக Economic Times இன்று (29.11.2017) செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை அதிகார மீறலாகும்.
நியூட்ரினோ திட்டத்தை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பின்பே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பதிவு செய்த பொது நல வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது. இதுநாள் வரை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழக்கவில்லை. மேலும் பூவுலகின் நண்பர்கள் தாக்கல் செய்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் நியூட்ரினோ திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. புதிய அனுமதி வாங்கவும் கூறியிருந்தது. அதன்படி நியூட்ரினோ திட்டத்திற்கான புதிய அனுமதி பெற பதிவு செய்யப்பட்ட மனுவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முன்பாக நிலுவையில் உள்ளது.

மேலும் இதே வழக்கில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை “தண்ணீர் மற்றும் காற்றில் ஏற்படும் மாசு குறித்த ஆய்வு மேற்கொள்ள மட்டுமே தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் நிபுணர்கள் உள்ளனர். நியூட்ரினோவிற்கு பல்வேறு துறை வல்லுனர்களின் கருத்து பெறப்பட வேண்டியிருப்பதால் அத்துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து அக்குழு அளிக்கும் முடிவின் அடிப்படையிலேயே இத்திட்டத்திற்கான அனுமதி வழங்க முடியும்” எனக் கூறியிருந்தது.


இந்த நிலையில் பிரதமரின் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் மீது நியுட்ரினோ ஆய்வகத்தை சட்டத்திற்கு புறம்பாக வலிந்து திணிப்பதாக அமைவது கண்டனத்திற்குரியது. அரசு அமைப்புகளை சுதந்திரமாக செயல்படுவதை தடுக்கும் விதமாக இச்செயல் உள்ளது.

நியூட்ரினோ திட்டம் அமைய உள்ள இடம் மேற்கு தொடர்ச்சி மலை என்பதாலும், இத்திட்டத்திற்க்கு தேவையான கட்டுமானத்திற்கு பல ஆயிரம் கிலோ வெடி மருந்துகள் பயன்டுத்தி சுரங்கம் அமைக்க வேண்டியுள்ளதாலும் சூழலியல் நோக்கில் இத்திட்டத்தை எதிர்க்கிறது பூவுலகின் நண்பர்கள் இயக்கம்.
மேலும் இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் என்பது செயற்கை நியூட்ரினோ கதிர்களையும் ஆய்வு செய்யும் வகையிலேயே திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தபடுகிறது என்னும் குற்றசாட்டையும் முன்வைக்கிறது பூவுலகின் நண்பர்கள் இயக்கம். இது ராணுவ தேவைக்கான ஆய்வாக அமையக்கூடும் என்னும் கருத்தும் உள்ளது. இந்த நிலையிலேயே இத்திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறது பூவுலகின் நண்பர்கள் இயக்கம்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago