தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களை ஏன் மூடக் கூடாது ? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Published by
Venu

 சென்னை உயர்நீதிமன்றம்,தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களை ஏன் மூடக் கூடாது எனவும், நடப்பாண்டில் எத்தனை கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன எனவும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, திருமுல்லைவாயலில் மதுபான கடைகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 பேரின் ஜாமீன் மனுக்களையும், மதுபான கடைகளை மூடக் கோரிய வழக்கையும் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், நீதிபதி பார்த்திபன் அடங்கிய அமர்வு, மதுபான கடைகளை திறந்திருக்கும் நேரத்தை ஏன் குறைக்க கூடாது எனக் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  பிற மாநிலங்களில் காலை 10 மணிக்கே மதுக்கடைகள் திறக்கப்படுவதாகவும், தமிழகத்தில் 12 மணிக்கு தான் திறக்கப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிற மாநிலங்களைக் குறிப்பிட்டு முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழகத்தில் தான் அதிகளவில் மதுபானம் அருந்துவோர் உள்ளதாகவும், எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர். தேர்தல் வாக்குறுதிப்படி, நடப்பாண்டில் எத்தனை  கடைகள் மூடப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பி நீதிபதிகள், விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

55 mins ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

1 hour ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago