தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களை ஏன் மூடக் கூடாது ? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Default Image

 சென்னை உயர்நீதிமன்றம்,தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களை ஏன் மூடக் கூடாது எனவும், நடப்பாண்டில் எத்தனை கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன எனவும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, திருமுல்லைவாயலில் மதுபான கடைகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 பேரின் ஜாமீன் மனுக்களையும், மதுபான கடைகளை மூடக் கோரிய வழக்கையும் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், நீதிபதி பார்த்திபன் அடங்கிய அமர்வு, மதுபான கடைகளை திறந்திருக்கும் நேரத்தை ஏன் குறைக்க கூடாது எனக் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  பிற மாநிலங்களில் காலை 10 மணிக்கே மதுக்கடைகள் திறக்கப்படுவதாகவும், தமிழகத்தில் 12 மணிக்கு தான் திறக்கப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிற மாநிலங்களைக் குறிப்பிட்டு முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழகத்தில் தான் அதிகளவில் மதுபானம் அருந்துவோர் உள்ளதாகவும், எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர். தேர்தல் வாக்குறுதிப்படி, நடப்பாண்டில் எத்தனை  கடைகள் மூடப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பி நீதிபதிகள், விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்