பல்வேறு பகுதிகளில் தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுக்கும் வேளையில் சில பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றியுள்ள கரட்டடிபாளையம் கொளப்பளுர், நல்லகவுண்டன்பாளையம், டி.என் பாளையம் உள்ளிட்ட பகுதியில் சூறாவளிக் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றின் வேகத்தில் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.
சத்தியமங்கலத்தில் நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசியபடி பலத்த இடி மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. சத்தியமங்கலம் – மேட்டுப்பாளையம் சாலையில் பவானிசாகர் அருகே எரங்காட்டூர் கிராமத்தில் உள்ள 100 வருட பழமை வாய்ந்த ஆலமரம் காற்றின் வேகத்தில் வேருடன் சாய்ந்து விழுந்தது.
வேலூர் மாவட்டம், கழிஞ்சூர், லத்தேரி, செங்குட்டை, கல்புதூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
சேலம் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. வாய்க்கால் பட்டறை மற்றும் அம்மாபேட்டை, வீராணம், வலசையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…