தமிழகத்தில் சமூக நலத்திட்ட தணிக்கை குழு இயக்குநர் செயல்பட தடை..!!விதித்தது உயர்நீதிமன்றம்..!!

Published by
kavitha

தமிழகத்தில் சமூக நலத்திட்டங்களை எல்லாம் தணிக்கை செய்யக்கூடிய குழுவின் இயக்குனர் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
GFX IN சமூக நலத்திட்டங்களுக்கான நிதி மற்றும் கிராம பஞ்சாயத்துகளை முறையாக சென்றடைவதை கண்காணிக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்டு வரும் சமூக தணிக்கை குழுவில் இயக்குநர்களை தற்போது நியமித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்திற்கென தனி அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பின் இயக்குநராக அண்ணாமலை பிரேம் குமார் என்பவரை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழக அரசின் இந்த ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.அதில் மாநில அரசே இயக்குநரை நியமிப்பதால் அது ஊழலுக்கு வழிவகுக்கும் என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தற்போது சமூக தணிக்கை குழுவின் இயக்குனராக உள்ள அண்ணாமலை பிரேம்குமார் என்பவர் செயல்பட இடைக்கால தடை விதித்ததோடு மட்டுமல்லாமல் மத்திய ஊரக வளர்ச்சி துறை மற்றும தணிக்கை துறையும்,தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Published by
kavitha

Recent Posts

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

13 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

22 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

3 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago