தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிகளை ஆதரித்து மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்குகிறார் ராகுல் காந்தி…

Default Image
  • காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் தமிழகமெங்கும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார், அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது என்றும், இக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும். என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மக்கள் பிரச்சனைக்காக போராடுகிற இந்த கூட்டணியில் நான் திருச்சியில் போட்டியிட தலைவர் ராகுல் காந்தி வாய்ப்பு கொடுத்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ராகுல் தலைமையில் ஆட்சி அமையும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி, மோடி மீது மக்களுக்கு அதிகமான வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்றும், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்