தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பு….! குட்கா ஊழல் வழக்கு ….!குட்கா குடோன் நிறுவன உரிமையாளர் உட்பட 4 பேர் கைது …!சிபிஐ அதிரடி …!

Default Image

குட்கா முறைகேடு வழக்கில் குட்கா குடோன் நிறுவன உரிமையாளர் மாதவ ராவ் உட்பட 4 பேர் கைது சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று குட்கா விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை  நடத்தினர்.குட்கா விற்பனையாளர் மாதவராவின் வீட்டில் கிடைத்த டைரியின் அடிப்படையில் ரெய்டு நடைபெற்றது.

Image result for குட்கா குடோன்

இதன் காரணமாக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு ,முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் ,தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இந்நிலையில் குட்கா வழக்கில் சிபிஐ நடத்திய சோதனையின் முடிவில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .அதில்  குட்கா குடோன் நிறுவன உரிமையாளர  ஏ.வி மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Image result for குட்கா குடோன்

ஏற்கனவே இன்று காலை  குட்கா ஊழல் வழக்கில் ராஜேஷ், நந்தகுமார் ஆகிய இரு இடைத்தரகர்கள் இன்று கைது செய்யப்பட்டனர் .இந்நிலையில் ஊழல் தொடர்பாக மேலும் 4 பேரை கைது செய்துள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் இன்னும்  பலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்