தஞ்சை மக்களுக்கு அரியலூரில் இருந்து நிவாரண பொருட்கள்…!!

Default Image

புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட மக்களுக்கு அரியலூரில் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

கஜா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. வீடுகள், உடைமைகள், பயிர்கள், கால்நடைகள் என அனைத்தையும் இழந்து ஏராளமான கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.இந்த நிலையில், அரிலூர் மாவட்ட அதிமுக சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள், தஞ்சை மாவட்ட மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.

dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்