டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் புகழேந்தி சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் பெற லஞ்சம் அளித்த புகாரில் ஆஜராக சம்மன்!
டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு,பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் பெற லஞ்சம் அளித்த புகாரில், 29ம்தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
டிஜிபி சத்யநாராயணா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சலுகைகள் பெற, லஞ்சம் பெற்றதாக டி.ஐ.ஜி. ரூபா அளித்த புகாரில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
பெங்களூருவில் வசிக்கும் தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ள லஞ்சஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. வரும் 29ஆம் தேதி பெங்களூருவில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகழேந்தி ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.