ஜெயலலிதா மரணம்: நீதிபதி ஆறுமுக சாமி ஆணையத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்-சசிகலா தரப்பிடம் விசாரணை..!!

Default Image

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுக சாமி ஆணையத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆணையத்தில் ஏற்கனவே விசாரணைக்கு ஆஜரானவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்துகின்றனர். ஏற்கனவே முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 20க்கு மேற்பட்டோரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சிறப்பு செயலாளராக இருந்த சாந்தஷீலா நாயர், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரப்பெருமாள், கலை மற்றும் பண்பாட்டு துறை ஆணையர் ராமலிங்கம் உள்ளிட்டோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்