ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : சசிகலாவையும் விசாரிக்க வேண்டும்..!பொன்னையன்
சட்டப்படி சசிகலாவை ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்கத்தான் வேண்டும் என்று பொன்னையன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.
அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று ஆறுமுகசாமி ஆணையத்தில் பொன்னையன் ஆஜரானார்.அதன் பின்னர் அவர் கூறுகையில், சட்டப்படி சசிகலாவை ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்கத்தான் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.