ஜெயலலிதா நினைவு தினத்தை தடைவிதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

Published by
Dinasuvadu desk

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை டிசம்பர் 5ம் தேதி அரசு சார்பில் அனுசரிக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.

அதன் பிறகு சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.  ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது  தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருபரங்குன்றம் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற போதுகட்சி சின்னம் வழங்குவது தொடர்பான படிவத்தில் அவர் சுய நினைவுடன் தான் கைரேகை வைத்தாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

உயிருடன் இருக்கும் போது பதிவு செய்த கைரேகைக்கு இறந்த பிறகு பதிவு செய்த கைரேகைக்கும் இருக்கும் வித்தியாசம் குறித்து தடய அறிவியல் துறை மூலமாக தான் அறிய முடியும். எனவே இந்த சர்ச்சைகள் அனைத்தும் விசாரணை முடிவடைந்து அறிக்கை தாக்கல் செய்யும் போது,கைரேகை தொடர்பாக தடய அறிவியல் துறை அறிக்கை வரும் போது தான் முழு விவரங்கள் தெரியவரும்.

எனவே டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா நினைவு தினத்தை அரசு சார்பில் அனுசரிக்க  அரசுக்கு தடைவிதிக்க வேண்டும் என வழக்கறிஞர் குமரவேல் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, ஒருவருடைய மரண தேதியை தீர்மானிக்க கூடிய நிபுணத்துவம் மற்றும் அனுபவமும் நீதிமன்றத்திற்கு இல்லை. மேலும் மருத்துவமனை சான்று அடிப்படையில் இறப்பு சான்று பெறப்பட்டுள்ளது.

பிறப்பு, இறப்பை தீர்மானிப்பதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறபிக்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

7 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

15 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago