விசாரணை ஆணையத்தில் ஆஜரான செவிலியர் ரேணுகா ,அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது, வீட்டில் தயாரிக்கப்பட்ட பாதம் அல்வா, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டதை மறுக்கவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.
மருத்துவர் அர்ச்சனா ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து வந்தவர். அண்மையில் வெளியான ஜெயலலிதாவின் அப்பலோ ஆடியோவில் மருத்துவர் அர்ச்சனாவின் குரல் இடம்பெற்று இருந்தது.
கடந்த 2ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன், மருத்துவர் அர்ச்சனா மற்றும் செவிலியர் ரேணுகா ஆகியோர் ஆஜராகினர். 3 மணி நேர விசாரணைக்கு பின் வெளியில் வந்த அர்ச்சனா, அப்போலோவில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ விளக்கத்தை அளித்தாக செய்தியாளர்களிடம் கூறினார்.
அப்போலோ மருத்துவர் அர்ச்சனாவைத் தொடர்ந்து, அதே மருத்துவமனையின் மூத்த செவிலியர் ரேணுகா, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் நடைபெற்ற விசாரணை தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூட்ரீசீயன் அறிவுரைபடியே ஜெயலலிதாவுக்கு உணவு வழங்கப்பட்டதாக செவிலியர் ரேணுகா கூறியுள்ளார்.
2016ஆம் ஆண்டு, நவம்பர் 27ஆம் தேதி வீட்டில் தயாரிக்கப்பட்ட பாதாம் அல்வா ஜெயலலிதாவிக்கு வழங்கப்பட்டு உள்ளதே என அப்பல்லோ அளித்த உணவு பட்டியலை காட்டி ஆணையம் தரப்பில் கேட்டவுடன், அதற்கு செவிலியர் ரேணுகா மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜ்குமார் பாண்டியன், சிகிச்சையின்போது ஜெயலலிதாவை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்ததை, தான் பார்த்ததாக, விசாரணை ஆணையத்தில், மருத்துவர் அர்ச்சனா தெரிவித்திருப்பதாக கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…