அண்ணா பல்கலைக்கழகம்,பொறியியல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர முடியாத மாணவர்கள் வரும் 14-ஆம் தேதிக்கு முன் எப்போது வேண்டுமானாலும் உதவி மையத்துக்கு வரலாம் என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக, கடந்த மே 3 முதல் ஜூன் 2-ஆம் தேதி வரையிலான விண்ணப்ப காலத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஜூன் 5 ஆம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழகம் முழுவதும் 42 சேவை மையங்கள் அமைக்கப்பட்டு, கடந்த வெள்ளியன்று சான்றிதழ் சரிபாக்கும் பணி தொடங்கியது. ரேண்டம் எண் வழங்கப்பட்டபோதே, மாணவர்கள் விரும்பிய சேவை மையங்கள் ஒதுக்கப் பட்டன.
இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்காக குறிப்பிட்ட தேதியில் செல்ல முடியாதவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே சேவை மையத்தில் வரும் 14-ஆம் தேதிக்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் சான்றிதழ் சரிபார்ப்புக்காக வரலாம் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒரே ஒரு முறைதான் அனுமதி என்பதால், உரிய சான்றிதழ்களின் அசலையும், நகலையும் தவறாமல் கொண்டு வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…