மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் கோரி இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி பகுதியில் கடந்த மே 3 ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், நடிகருமான மன்சூர் அலிகான், விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசினார்.
அப்போது, 8 வழிச்சாலை அமைப்பது குறித்து வன்முறையாகப் பேசி சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீஸார் நடிகர் மன்சூர் அலிகான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக மன்சூர் அலிகானை சென்னையில் நேற்று போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சேலம் கொண்டு வரப்பட்ட அவர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சேலம் ஓமலூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…