சேலம் – சென்னை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 15 ஆம் தேதி சேலத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ(SDP) கட்சியின் புதிய மாநில தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை அல்ல, இது பசுமையை அழிக்கும் சாலை.எஸ்.டி.பி.ஐ 8 வழிச்சாலையை எதிர்த்து வருகிற 15 ம் தேதி சேலத்தில் மாபெரும் போராட்டம் நடத்தினர்.
சேலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்திய அன்னதானப்பட்டி ஜவஹர், அறிவு உள்ளிட்ட 19 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்குகிறது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை தொடங்கி வைதத்தர்.
1993-ம் ஆண்டு திறக்கப்பட்ட சேலம் விமான நிலையம், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் ஓராண்டுக்குள் மூடப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் மீண்டும் விமான போக்குவரத்தைத் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.இந்தநிலையில் நபர் ஒருவருக்கு ஒரு வழிப் பயணத்திற்கு ரூ.1,499 என ட்ரூஜெட் நிறுவனம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. 72 பயணிகள் அமரும் வகையில் சிறிய ரக விமானம் இயக்கப்படவுள்ளது.
சேலம் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 160 ஏக்கர் நிலப்பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்டது.பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கடந்த மே மாதம் 12-ந் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலைய விரிவாக்கத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து பேசினார்.
இதற்கு எதிராக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசுக்கு எதிராக விவசாயிகளை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஓமலூர் போலீ சார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சீமான் முன்ஜாமீன் பெற்றார்.
சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…