சேலம் காஞ்சி சங்கரமடத்தின் மீது பெரியார் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், விஷ்வ ஹிந்து பரிஷத் ரதயாத்திரையை கண்டித்தும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பெரியாரின் சிலைகள் உடைக்கப்படும் என்ற ஹெச்.ராஜாவின் கருத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த நிலைத்தகவல் தனது அனுமதி இல்லாமல் அட்மினால் போடப்பட்டது என்று விளக்கமளித்ததோடு அந்த சம்பவத்திற்கு ஹெச்.ராஜா மன்னிப்பும் கோரினார்.
எனினும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நள்ளிரவில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் போராட்டம் செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் மரவனேரி பகுதியில் உள்ள காஞ்சி சங்கரமடம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சங்கரமடத்தின் நுழைவு வாயிலில் உள்ள மின் விளக்குகளை உடைத்தும், பதாககைகளை கிழித்தெறிந்தும் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரமடத்தின் நுழைவு வாயிலில் உள்ள மின் விளக்குகளை உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாக சேலம் நங்கவள்ளி பகுதியைச் சார்ந்த, கிருஷ்ணன், ராஜேந்திரன், மனோஜ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து
அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…