சேலம் அருகே எட்டு வழிச்சாலையால் 7 பேர் கைது!

Default Image

எட்டு வழிச்சாலைக்கு நிலம் அளக்கும் பணிக்கு சேலம் அருகே  எதிர்ப்பு தெரிவித்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

274 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த திட்டத்திற்காக சேலத்தில் நிலம் அளந்து எல்லைக் கல்லை பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆச்சாங்குட்டப்பட்டியில் வட்டாட்சியர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்புடன் பணிகள் நடைபெற்ற போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்பு தெரிவித்த உண்ணாமலை, சுதா, அலமேலு , சகுந்தலா, நடராஜன், ரவிச்சந்திரன், பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் கூடுதலாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்