சேலத்தில் பசுமைவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 4பேர் கைது!

Published by
Venu

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 4பேரை  சேலத்தில் பசுமைவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களை போராட்டத்திற்கு தூண்டி வந்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் – சென்னை இடையே திருவண்ணாமலை மாவட்டம் வழியாகப் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமைவழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சாலை அமைக்கப்பட உள்ள பாதையில் விளைநிலங்கள், குடியிருப்புகள் கையகப்படுத்தப்படும் என்பதால் விவசாயிகள் சிலர் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

பசுமைவழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடக் கோரி விவசாயிகளும் பொதுமக்களும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் இந்தத் திட்டத்துக்கு ஆய்வுக்குச் சென்ற வருவாய்த்துறையினரைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்துப் பசுமைவழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்துப் பொதுமக்களைப் போராடத் தூண்டுபவர்களைக் கண்காணிக்க உளவுத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாரிமுத்து, நாராயணன், முத்துக்குமார், ரவி ஆகியோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சேலம் மாநகரக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் ரவியைக் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திலும், மற்ற மூவரை அம்மாப்பேட்டைக் காவல்நிலையத்திலும் வைத்து விசாரித்தனர்.

இவர்கள் பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு எதிராக மக்களை திரட்டும் பணியில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதையறிந்த பொதுமக்களும் விவசாயிகளும் காவல்நிலையத்துக்குத் திரண்டுசென்று அவர்களை விடுவிக்கக் கோரி முற்றுகையிட்டனர். இதனிடையே விசாரணைக்குப் பின் 4பேரையும் வேறுஇடத்துக்குக் காவல்துறையினர் கொண்டுசென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

WWE : “என்னோட இன்னொரு முகத்த பாப்ப”… ட்ரூ மெக்கின்டைரைவுக்கு எச்சரிக்கை விடுத்த சிஎம் பங்க்!!

WWE : “என்னோட இன்னொரு முகத்த பாப்ப”… ட்ரூ மெக்கின்டைரைவுக்கு எச்சரிக்கை விடுத்த சிஎம் பங்க்!!

அமெரிக்கா : இப்போது WWE -யில் பரபரப்பாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போட்டி என்றால் ட்ரூ மெக்கின்டைர் மற்றும் சிஎம்…

54 seconds ago

INDvsBAN : போதிய வெளிச்சம் இல்லை!! நிறைவடைந்த முதல் நாள் ஆட்டம்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால்…

29 mins ago

நிற்காமல் சென்ற லாரி.. விறுவிறு சேஸிங்.. இறுதியில் என்கவுன்டர்! லாரி உரிமையாளர் கூறுவது என்ன?

நாமக்கல் : கேரளாவில் ATM-களில் கொள்ளையடித்த கொள்ளைக்கும்பல் தப்பி வந்த கண்டெய்னர் லாரி நாமக்கல் - பச்சாபாளையம் அருகே பிடிபட்டது. பச்சாபாளையம்…

54 mins ago

பிக் பாஸ் சீசன் 8 : களமிறங்கும் விஜய் சேதுபதி மகள்?

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க போகிறது என்றாலே அதில் கலந்துகொள்ளவுள்ளதாக, பல பிரபலங்களுடைய பெயர் அடிபடும். அப்படி…

1 hour ago

கல்யாண வீட்டு சாம்பார் ..செய்முறை ரகசியங்கள் இதோ..!

சென்னை -கல்யாண வீட்டு ஸ்டைல்ல  சாம்பார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  தெரிந்து கொள்வோம் . தேவையான…

1 hour ago

மெட்ரோ திட்டம்., ரூ.2,152 கோடி நிதி., 145 மீனவர்கள் விடுதலை., டெல்லியில் மு.க.ஸ்டாலின் பேட்டி.!

 டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர்…

2 hours ago