செல்பியால் தன் 'செல்ல'த்தை இழந்த தந்தை..!!

Default Image
நாமக்கல், காவிரி பாலத்தின் கைப்பிடியில், 4 வயது மகனை அமர வைத்து, தந்தை, ‘செல்பி’ எடுத்த போது, தவறி விழுந்த சிறுவன், நீரில் அடித்துச் செல்லப்பட்டான்.
கரூரைச் சேர்ந்தவர் பாபு, 39; இவரது மனைவி ஷோபா, 30. மகன் தன்வந்த், 4; எல்.கே.ஜி மாணவன்  நேற்று முன்தினம், பிறந்த நாளை கொண்டாடிய தன்வந்த் ப.வேலுார் காவிரி ஆற்றுக்கு தனது பெற்றோருடன் சென்று தண்ணீர் வருவதை பார்த்து கொண்டிருந்தான்.
அப்போது இடது கையால் தாங்கி பிடித்தபடி செல்போனில் ‘செல்பி’ எடுத்துள்ளார் பாபு அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததன் காரணமாக ஆற்றின் பின்னால் சாய்ந்த தன்வந்த், தந்தையின் பிடியில் இருந்து நழுவி ஆற்றில் விழுந்தான் விழுந்த அச்சிறுவனை  வேகமாக வந்து கொண்டிருந்த நீரில் அடித்து செல்லப்பட்டான்.
அதிர்ச்சியடைந்த பாபு மகனை காப்பாற்ற முடியாமல் கதறி அழுதார்.அக்கம் பக்கத்தினர் மோகனுார் போலீசாருக்கும், நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.தனது செல்பி மோகத்தால் குழந்தையை இழந்து வாடி வருகிறார் பாபு.இப்பொழுது வருந்தி என்ன பயன் செல்பி மோகத்தால் ஒரு உயிர் போனது.

 
நீரால் அடித்து செல்லப்பட்ட செல்லம் தஷ்வந்த்

 
DINASUVADU
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்