செப்டம்பர் 10ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு…!குவியும் ஆதரவு ..!

Default Image

செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் சார்பில் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.

Image result for பெட்ரோல்

இதனால் செப்டம்பர் 10 ஆம் தேதி நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது.

இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்.

இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்.அதேபோல் மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,மதிமுக உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.

Image result for வேல்முருகன்

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.மேலும்  பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்