சென்னை ரயில் விபத்து: ரயிலை மாற்றுப்பாதையில் இயக்கியபோது விபத்து!ரயில்வே ஆணையர் தகவல்
சென்னை பரங்கிமலையில் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரயில்வே பாதுகாப்புக்குழு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார்.ஆய்வுக்கு பின்னர் மின்சார ரயிலை மாற்றுப்பாதையில் இயக்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. படியில் தொங்கியபடி பயணிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சம்பவத்தைநேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது. பக்கவாட்டுச்சுவர் அளவிடப்பட்டு வருகிறது. இடிப்பதா இல்லையா என்பது ஆய்வுக்குப்பின் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.