சென்னை காதல் திருமணம் செய்து கொண்ட பெண் கணவனால் கழுத்தை அறுத்து கொலை!

Default Image

காதல் திருமணம் செய்து கொண்ட பெண் சென்னை  ஸ்ரீபெரும்புதூர் அருகே  கணவனால் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலைக்கு செல்லாமல் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து கொண்டு போதைக்கு அடிமையான இளைஞரின் கொடூர செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலம் அடுத்த நல்லூர், புதுநகரை சேர்ந்த காசி-லட்சுமி தம்பதியரின் மகள் பானுபிரியா . கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், அதே ஊரை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரை காதலித்து வந்த பானுப்பிரியா பெற்றோர் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்கள் கடந்த நிலையில் மகளின் எதிர்காலம் கருதி அவர்களது திருமணத்தை பானுபிரியாவின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். மகளையும், மருமகனையும் தங்கள் வீட்டின் முதல் மாடியில் குடிவைத்தனர்.

ஆரம்பத்தில் இனிமையாக கடந்த பானுப்பிரியாவின் காதல் திருமண வாழ்க்கையில் மது என்னும் அரக்கனால் இடி விழத் தொடங்கியது. வீட்டோடு மாப்பிள்ளையான சதீஷ் வேலைக்கு செல்லாமல், மது அருந்திவிட்டு போதையில் ஊதாரியாக சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

பானுபிரியா நீண்ட நேரமாக கீழே இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் லட்சுமி, மாடிக்கு சென்று பார்த்த போது, அங்கு பானுபிரியா கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அறுக்கப்பட்ட அவரது கழுத்தில் பெல்ட்டாலும் இறுக்கப்பட்டிருந்தது. தனது மகளின் சடலத்தை கண்டு தாய் லட்சுமி கதறித்துடித்தார். சம்பவம் தொடர்பாக சோமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் பானுப்பிரியாவின் சடலத்தை கைப்பற்றி பிணகூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து கொண்டு வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றி வந்த காதல் கணவர் சதீஷ் தான் இந்த கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து விசாரித்த போது கொலைக்காண காரணம் வெளிச்சத்துக்கு வந்தது.

சதீஷ் வேலைக்கு செல்லாத்ததால் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு பானுப்பிரியாவின் தலையில் விழுந்துள்ளது. அவர் அதே பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்துள்ளார்.

 

மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான சதீஷ், தனது அன்றாட செலவுக்கு மனைவியின் கையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அவர் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கே சென்று பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சதீஷுக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. அப்போது உடன் பணிபுரிவோரிடம் பானுப்பிரியா பேசுவதை கண்டு பானுபிரியாவின் நடத்தை மேல் காதல் கணவர் சதீஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் பானுப்பிரியாவை அடித்து உதைப்பதை வாடிக்கையாக்கியதாக கூறப்படுகின்றது

சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய பானுப்பிரியாவிடம் ஏற்பட்ட தகராறில் வாக்கு வாதம் முற்றி காதல் மனைவி என்றும் பாராமல் பெல்ட்டால் சரமாரியாக தாக்கிய அவர் , கழுத்தை பெல்ட்டால் இறுக்கி கொலை செய்துள்ளார். மேலும் அவர் பிழைத்து கொள்ளக்கூடாது என்பதற்காக கத்தியாலும் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காதலிக்கும் இளைஞரின் பின்னணியை அறியாமல் ,பருவ வயதில் இனக்கவர்ச்சியால் ஒன்று சேரும் காதல் ஜோடிக்களுக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை பாடம்..!

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்