சென்னை ஐகோர்ட்_க்கு நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்பு..!!

Published by
Dinasuvadu desk

ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி ஆகியோர் ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்பு நடைபெற்றது.

சென்னை ஐகோர்ட்டின், கூடுதல் நீதிபதியாக ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி ஆகியோரை நியமித்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதன்படி, அவர்கள் 3 பேரும் அதே ஆண்டு நவம்பர் 16-ந்தேதி கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்

இந்த நிலையில், இவர்கள் 3 பேரையும் ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, 3 பேரையும் நிரந்தர நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி, நீதிபதிகள் ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி ஆகிய 3 பேரும் நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி, தலைமை நீதிபதி சேம்பரில் வைத்து நடந்தது. இதில், ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.மணிக்குமார், கே.கே.சசிதரன், ஆர்.சுப்பையா உள்பட பல நீதிபதிகளும், அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட அரசு தரப்பு வக்கீல்கள், வக்கீல் சங்கங்களின் நிர்வாகிகள் என்று பலர் கலந்துகொண்டனர்.

dinasuvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

11 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

19 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago