சென்னை உயர் நீதிமன்றம்,முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை தெரிவிக்காதது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி 3 முறை சம்மன் அனுப்பியும், கார்த்தி சிதம்பரம் ஆஜராகாததால், அவரை கைது செய்ய, நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு வருமான வரித் துறை, வாரன்ட் பிறப்பித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற அனுமதியோடு மனைவி மற்றும் குழந்தையுடன் லண்டன் செல்ல இருந்த கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க கோரி, மூத்த வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் முறையிட்டனர்.
அவரது அனுமதியைத் தொடர்ந்து, தனது வீட்டில் வைத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதிஷ் சந்திரா விசாரித்தார். அப்போது, , வருகிற 28 ம் தேதி வருமான வரித் துறை அதிகாரி முன் விசாரணைக்கு ஆஜராவதாக கார்த்தி சிதம்பரம் தரப்பு அளித்த உத்தரவாதத்தை ஏற்று முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…