சென்னை உயர்நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கியது!

Default Image

சென்னை உயர் நீதிமன்றம்,முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கி  உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை தெரிவிக்காதது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி 3 முறை சம்மன் அனுப்பியும், கார்த்தி சிதம்பரம் ஆஜராகாததால், அவரை கைது செய்ய, நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு வருமான வரித் துறை, வாரன்ட் பிறப்பித்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற அனுமதியோடு மனைவி மற்றும் குழந்தையுடன் லண்டன் செல்ல இருந்த கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க கோரி, மூத்த வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் முறையிட்டனர்.

அவரது அனுமதியைத் தொடர்ந்து, தனது வீட்டில் வைத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதிஷ் சந்திரா விசாரித்தார். அப்போது, , வருகிற 28 ம் தேதி வருமான வரித் துறை அதிகாரி முன் விசாரணைக்கு ஆஜராவதாக கார்த்தி சிதம்பரம் தரப்பு அளித்த உத்தரவாதத்தை ஏற்று முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்