சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாதிரி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது!

Published by
Venu

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் திமுக அறிவித்தது.இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாதிரி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மாதிரி சட்டசபையில் இரங்கல் தெரிவித்தனர்.

நேற்று  பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியது:

துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தை முதலமைச்சரின் அறிக்கையில் எந்த இடத்திலும் இல்லை” என்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேரவையில் கூறுகையில், “துப்பாக்கிச்சூடு குறித்து வேதனை தெரிவிக்க முதலமைச்சருக்கு 5 நாட்கள் தேவைப்பட்டது” என்றும் வருத்தம் தெரிவித்தார். போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்” .”சீருடை அணியாத போலீசாரும் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்” .துப்பாக்கிச்சூடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்”.போராட்டக்காரர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.தூத்துக்குடியில் தனியார் ஆலைக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று  பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின் ஸ்டாலின் கூறியது:

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்,அவர் கூறுகையில், ஆலை மூடல் தொடர்பாக அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் .துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் . துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும்.மேலும் ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூடும் வரை சட்டப்பேரவை நடவடிக்கைகளை திமுக புறக்கணிக்கும் என்றும் தெரிவித்தார். அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டோம் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago