சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாதிரி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது!

Default Image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் திமுக அறிவித்தது.இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாதிரி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மாதிரி சட்டசபையில் இரங்கல் தெரிவித்தனர்.

நேற்று  பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியது:

துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தை முதலமைச்சரின் அறிக்கையில் எந்த இடத்திலும் இல்லை” என்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேரவையில் கூறுகையில், “துப்பாக்கிச்சூடு குறித்து வேதனை தெரிவிக்க முதலமைச்சருக்கு 5 நாட்கள் தேவைப்பட்டது” என்றும் வருத்தம் தெரிவித்தார். போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்” .”சீருடை அணியாத போலீசாரும் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்” .துப்பாக்கிச்சூடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்”.போராட்டக்காரர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.தூத்துக்குடியில் தனியார் ஆலைக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று  பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின் ஸ்டாலின் கூறியது:

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்,அவர் கூறுகையில், ஆலை மூடல் தொடர்பாக அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் .துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் . துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும்.மேலும் ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூடும் வரை சட்டப்பேரவை நடவடிக்கைகளை திமுக புறக்கணிக்கும் என்றும் தெரிவித்தார். அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டோம் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்