சென்னையில் விதிகளை மீறி பேனர்கள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை…!!

Published by
Dinasuvadu desk

சென்னையில் விதிகளை மீறி பேனர்கள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஒவ்வொரு விண்ணப்பத்தாரரும் படிவம்-1யை பூர்த்தி செய்து அனுமதி கோரும் நாளுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட தடையின்மை சான்று, பேனர் அமைக்கப்பட உள்ள இடம் உள்ளிட்ட தகவல்களுடன் சென்னை மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அனுமதி கட்டணம் 200 ரூபாய், காப்பீட்டு கட்டணம் 50 ரூபாய் வரைவோலையாக செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஆணையர், அனுமதி பெறாமல் அமைக்கப்படும் விளம்பர பதாகைகள் உடனடியாக அகற்றப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
அனுமதி வழங்கப்படும் விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகளின், கீழ் பகுதியில் அனுமதி எண், அனுமதிக்கான கால அவகாசம், அச்சகத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்று இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
விதிகளை மீறி வைக்கப்படும் விளம்பர பதாகைகள் குறித்து 1913 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago