சென்னையில் வாங்கிய கடனை திருப்பி தரா முடியாததால் கடத்தல் காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட தொழிலதிபர்!

Published by
Venu

வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பி தரா முடியாததால் சென்னையில் தொழிலதிபரை காரில் கடத்தி அடித்து துன்புறுத்தி சாலையில் வீசி சென்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

ஈக்காட்டுதாங்கல் அம்பாள் நகரை சேர்ந்தவர் விஜய் பிராங்ளின். ஞாயிற்று கிழமை இரவு தனது வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது, இரண்டு பக்கத்திலும் கார்கள் வந்து நின்றன. சிறிது நேரத்தில் விஜய் பிராங்ளினை காரில் ஏற்றி கடத்திச் சென்ற கும்பல், காரில் வைத்தே அடித்து துன்புறுத்தியது. அண்ணா நகர் அருகே கார் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது காரில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டு சென்றது அந்தக் கும்பல். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிராங்ளின், காயத்துடன் வந்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அண்ணா நகரை சேர்ந்த பைனான்சியர் சசிக்குமாரும், அவரது கூட்டாளிகளும் பணம் கேட்டு கடத்தி அடித்து துன்புறுத்தியதாக கூறினார். இதையடுத்து தனிப்படை அமைத்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் பைனான்சியர் சசிக்குமார் மற்றும் வினோத்குமார், முகேஷ், கார்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்ததுடன் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பிராங்ளின் வெளிநாட்டு கை காடிகார விற்பனையகம் ஒன்றை கிண்டியில் வைத்திருந்தார்.

தொழிலை மேம்படுத்துவதற்காக அண்ணாநகரை சேர்ந்த பைனான்சியர் சசிக்குமாரிடம் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். ஆனால் தொழிலில் நட்டம் ஏற்பட்டு பிராங்களின் தனது விற்பனையகத்தை மூடிவிட்டார். இதனால் வட்டியும் தர முடியாமல், அசல் தொகையையும் தரா முடியாத நிலையில் தான் அவரை கடத்தி துன்புறுத்தியுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் துரிதமாக செயல்பட்டு கடத்தல் கும்பலை பிடித்த கிண்டி காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை உயரதிகாரிகள் பாராட்டினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

8 mins ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

28 mins ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

42 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

2 hours ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago