சென்னையில் லாரி உரிமையாளரை அடித்துக்கொன்றதாக 3 பேர் கைது!

Default Image

லாரி உரிமையாளரை அடித்துக்கொன்றதாக சென்னை மாதவரத்தில்  3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
மாதவரம் மஹாவீர் நகரை சேர்ந்தவர் பாபு. லாரி உரிமையாளரான இவர், தன்னுடையே நண்பரான சிவா என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்கில் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது வஜ்ரவேல் நகரை சேர்ந்த சுரேந்தர் என்பவர் தனது மனைவியுடன் குடிபோதையில் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அப்போது, இவ்வளவு போதையில் மனைவியை வைத்து வாகனம் ஓட்டலாமா என பாபு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கிடையே வாய்தகராறு மூண்டுள்ளது. பின்னர் அங்கிருந்து சென்ற சுரேந்தர் தனது நண்பர்களை அழைத்து கொண்டு வந்து பாபுவை கடுமையாக தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த பாபு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார், ஹைதர்அலி, ஜோதீஸ்வரன், அசோக் ஆகியோரைக் கைது செய்ததோடு, சுரேந்தர் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்